வரலாற்று வெற்றி குறித்து கேப்டன் ஷாய் ஹோப் நெகிழ்ச்சி! 

இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று வெற்றி குறித்து தொடர் நாயகனும் கேப்டனுமான ஷாய் ஹோப் நெகிழ்ச்சியாக பேட்டியளித்துள்ளார். 
வரலாற்று வெற்றி குறித்து கேப்டன் ஷாய் ஹோப் நெகிழ்ச்சி! 
Published on
Updated on
1 min read

இங்கிலாந்து அணி  மேற்கிந்திய தீவுகள் அணி நாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் விளையாட சென்றுள்ளன. இதில் ஒருநாள் தொடரில் 2-1 என மேற்கிந்திய தீவுகள் அணி வென்று அசத்தியுள்ளது. 

மேத்யூ ஃபோர்டு ஆட்ட நாயகன் விருது பெற சாய் ஹோப் தொடர் நாயகன் விருது பெற்றார். 

இந்த வெற்றி குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனும் தொடர் நாயகனுமான ஷாய் ஹோப் குறியதாவது: 

எங்களுக்கு தேவையான வெற்றியை பெற்றுள்ளோம். என்னுடைய ரன்கள் வெற்றிக்கு உதவுவதாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பெரிதாக யோசிக்க எதுவுமில்லை. நான் அடிப்படையை சரியாக செய்வதில் கவனத்துடன் இருக்கிறேன். சூழ்நிலைக்கு ஏற்றார்போல் விளையாடுகிறேன். எனது அணிக்கு நான் முன்மாதிரியானவராக இருக்க விரும்புகிறேன். 

பேட்டர்கள் சிறப்பாக விளையாடுவதை பார்க்க நன்றாக இருந்தது. கிரிக்கெட்டில் நெடும் வரலாறு இருக்கிறது. அவர்களுடன் போட்டியிடுவது சற்று கடினம். நான் இங்குதான் முத்ப் போட்டி விளையாடினேன். அது எப்போதுமே அற்புதமான உணர்வை தருகிறது. போர்டுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.  மே.இ.தீவுகள் அணிக்கு விளையாடுவது எப்போதும் பெருமையை தருவதாகும் எனக் கூறினார். 

முதல் வெற்றியின்போது தொனியின் பாணியில் விளையாடி வெற்றி பெறச் செய்ததும் குறிப்பிடத்தக்கது. சிறந்த பேட்டர் மட்டுமின்றி சிறந்த கேப்டனாகவும்  உருவாகி வருகிறார் ஷாய் ஹோப். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com