பாஸ்போர்ட் மற்றும் விசா பிரச்னைகளினால் பாகிஸ்தான் அணி மருத்துவரின்றி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 14 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த நிலையில், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) பிரச்னைகளினால் பாகிஸ்தான் அணி மருத்துவரின்றி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடருக்கு பாகிஸ்தான் அணியின் மருத்துவராக சோஹைல் சலீம் அறிவிக்கப்பட்டார். இருப்பினும், அவர் இன்னும் பாகிஸ்தான் அணியுடன் இணையவில்லை.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரில் இந்த விதியை நீக்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் சார்பில் தெரிவித்ததாவது: பாகிஸ்தான் அணியின் மருத்துவரான சலீம் அவர்களுக்கு நுழைவு இசைவு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நுழைவு இசைவு (விசா) கிடைத்தவுடன் அவர் உடனடியாக அணியுடன் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பைப் போட்டியில் அணி நிர்வாக மேலாளரின்றி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.