ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மீண்டும் தில்லி கேப்டனாகும் ரிஷப் பந்த்?

ஐபிஎல் தொடர் 2024-ல் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
ரிஷப் பந்த்
Updated On :12 டிசம்பர் 2023, 7:29 am

DIN

ஐபிஎல் தொடர் 2024-ல் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தில்லி தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இதனால், ஐபிஎல் 2023, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை.

தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள பந்த், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். அவரை பிசிசிஐ நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர்.

கடந்த ஐபிஎல் தொடரில் விளையாட போதும் பந்தை தில்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் விடுவிக்காமல் தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில், வருகின்ற பிப்ரவரி மாத இறுதிக்குள் ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற்று மீண்டும் தில்லி அணியின் கேப்டனாக ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்று அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பந்தின் கீப்பிங் குறித்து பிசிசிஐ ஆராய்ந்து ஒப்புதல் அளித்த பிறகே அவர் கீப்பிங் செய்ய முடியும் என்ற சூழல் உள்ளது.

ஐபிஎல் தொடருக்குள் கீப்பிங் செய்ய பிசிசிஐ ஒப்புதல் அளிக்காத பட்சத்தில், பேட்டிங்கில் மட்டும் பந்த் கவனம் செலுத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினீசர் இல்லாமல் திணறி வரும் சூழலில், ரிஷப் பந்தின் வருகை அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.