இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று (டிசம்பர் 19) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்கரம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது.
இதையும் படிக்க: ஆர்சிபி அணியில் அல்சாரி ஜோசப்!
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ளதால் இன்றையப் போட்டியில் அவர் விளையாடவில்லை. ரிங்கு சிங் அறிமுக வீரராக ஒருநாள் போட்டிகளில் களம் காண்கிறார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருக்கும் நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்போடு களம் காண்கிறது.