தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சச்சினின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்!

சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை வங்கதேச வீரர் சௌமியா சர்கார் முறியடித்துள்ளார். 

News image
படம் | எக்ஸ் (ட்விட்டர்)
Updated On :21 டிசம்பர் 2023, 12:38 pm

DIN

சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை வங்கதேச வீரர் சௌமியா சர்கார் முறியடித்துள்ளார். 

வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3  ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் முதலில் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று (டிசம்பர் 20) நடைபெற்றது. இந்தப் போட்டியில் வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் சௌமியா சர்கார் அதிரடியாக 151 பந்துகளில் 169 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 22  பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம், புதிய சாதனை ஒன்றையும் அவர் படைத்துள்ளார்.

இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து நியூசிலாந்தில் ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்னதாக, கடந்த 2009  ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் 163 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.  அந்த சாதனையை சௌமியா சர்கார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்துள்ளார். சௌமியா சர்காருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.