6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஓய்வை அறிவித்த இயான் மார்கன்! 

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

News image
கோப்புப் படம் (இயான் மார்கன்)
Updated On :13 பிப்ரவரி 2023, 1:46 pm

DIN

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் இயான் மார்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்தாண்டு ஜூன் 28ஆம் தேதி ஓய்வை தெரிவித்தார். 13 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த இயான் மார்கன் (36) இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு 2019-இல் உலகக் கோப்பை வென்று கொடுத்தார்.2010-இல் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வென்றபோது அதிலும் விளையாடியிருந்தார் மார்கன்.

7 ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்த மார்கன், ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்தை முதலிடத்துக்கு அழைத்துச் சென்றார்.ஒருநாள் மற்றும் டி20யில் அதிக ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை மார்கன் பெற்றுள்ளார்.அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையிலும் மார்கனுக்கே முதலிடம்.

இதுவரை மொத்தம் 83 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள இயான் மார்கன் 1,405 ரன்கள் எடுத்துள்ளார். 

அபுதாபி டி10, எஸ்ஏ20 போன்ற தொடர்களில் விளையாடி வந்த மோர்கன் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார். 

“2005இல் இங்கிலாந்துக்கு சென்று மிடிசெக்ஸ் அணிக்கு விளையாடியதி இருந்து எஸ்ஏ20 பார்ல் ராயல்ஸ் அணிக்கு விளையாடியது வரை ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடியுள்ளேன்.அனைத்து விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் உயர்வு தாழ்வு இருக்கும். ஆனால் எப்போதும் எனது குடும்பம் என்னுடன் இருந்தது. அவர்களுடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது ஓய்வை அறிவிப்பது சரியாக இருக்குமென நம்புகிறேன். இருப்பினும் வர்ணனையாளர் போன்று எதாவது கிரிக்கெட் சம்பந்தப்பட்ட ஒன்றில் தொடர்ந்து இருப்பேன்” எனவும் மார்கன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.