திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை! 

பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டாா்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:45 am IST

லண்டனில் நடைபெறும் 2வது ஆஷஸ் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

4வது நாள் முடிவில் இங்கிலாந்து 114/4 ரன்கள் எடுத்தது. இதில் மிட்செல் ஸ்டாா்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த விக்கெட்டின் மூலம் ஸ்டார்க் டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

ஆஸ்திரேலியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (315)எடுத்த இடது கை பந்து வீச்ச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். மிட்செல் ஜான்சன் 313 விக்கெட்டுகளுடன் இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். 

மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் ஸ்டார்க் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். க்ளென் மெக்ராத் 563 விக்கெட்டுகளுடன் இரண்டாமிடமும் லயன் 496 விக்கெட்டுகளுடன் மூன்றாமிடத்திலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.