கடந்தாண்டு (2022) ஐபிஎல் போட்டிகளில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணி புதியதாக களமிறங்கியது.
எல்எஸ்ஜி அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார் ஆன்டி பிளவர். பௌலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கலும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் செயல்பட்டு வந்தனர். கே.எல்.ராகுல் கேப்டனாக இருக்கிறார்.
இதையும் படிக்க: ருதுராஜ் கேப்டன்: ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி!
2023ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு (3வது இடம்) தகுதி பெற்ற எல்எஸ்ஜி அணி ப்ளே -ஆஃப் சுற்றில் மும்பை அணியிடம் படு தோல்வியடைந்தது.
இதையும் படிக்க: ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த அஸ்வின்!
இந்நிலையில் ஆன்டி பிளவருக்குப் பதிலாக பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இவரது பங்களிப்பு சிறப்பாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் மிகப் பெரிய மாற்றங்கள் உண்டாகுமென லக்னௌ அணியின் உரிமையாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.