இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்படாஸில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இன்றையப் போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்றையப் போட்டியில் இந்திய அணியை ஹார்திக் பாண்டியா வழிநடத்துகிறார்.