எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி: உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் இலங்கைக்கு சிக்கலா?

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

News image
Updated On :2 ஜூன் 2023, 4:32 pm

DIN

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளில் விளைடாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று (ஜூன் 2) இலங்கையின் மகிந்த ராஜபட்ச சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை தரப்பில் சரித் அசலங்கா அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து தனஞ்ஜெயா டி சில்வா 51 ரன்களும், பதும் நிசங்கா 38 ரன்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி மற்றும் ஃபரீத் அகமது தலா 2 விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

இதனையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது ஆப்கானிஸ்தான். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹமனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ரஹீம் ஸத்ரான் களமிறங்கினர். குர்பாஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், இப்ரஹீமுடன் ஜோடி சேர்ந்தார் ரஹ்மத் ஷா. இந்த இணை சிறப்பாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். ரஹ்மத் ஷா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய இப்ரஹீம் 98 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர் 98 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் 46.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றியைப் பதிவு செய்தது. சிறப்பாக ஆடி 98 ரன்கள் குவித்த இப்ரஹீமுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவதற்கு  இலங்கை அணிக்கு இந்த ஒரு நாள் தொடர் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.