முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றதால் அதீத நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறுவது தவறு என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் நாளை தொடங்குகிறது.
3-வது டெஸ்டில் இந்திய அணி சிறிது அதீத நம்பிக்கையுடன் விளையாடியதாக இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய அணி மீதான விமர்சனம் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
நாங்கள் முதல் இரு டெஸ்டுகளில் வென்றபிறகு வெளியே உள்ளவர்கள் நாங்கள் அதீத நம்பிக்கையுடன் இருப்பதாக எண்ணி விடுகிறார்கள். இது முழுக்க அபத்தமானது. ஏனெனில் நாங்கள் நான்கு டெஸ்டுகளிலும் நன்றாக விளையாட வேண்டும் என எண்ணுகிறோம். இரு டெஸ்டுகளில் மட்டும் வெற்றி பெற எண்ணவில்லை. நாங்கள் அதீத நம்பிக்கையுடன் உள்ளதாக மற்றவர்கள் எண்ணினால் எங்களுக்கு அதுகுறித்துக் கவலையில்லை. ஏனெனில் ரவி சாஸ்திரியும் எங்களுடன் ஓய்வறையில் இருந்துள்ளார். விளையாடும்போது நாங்கள் என்ன மனநிலையில் இருப்போம் என அவருக்குத் தெரியும். தீவிரமாகப் போராடுவதே முக்கியம் என்றார்.
நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பும்ரா!
ஐபிஎல்: லக்னெள அணியின் புதிய சீருடையை விமர்சிக்கும் ரசிகர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 4-வது டெஸ்டிலும் இந்தியா தோற்றால் என்ன ஆகும்?
நடிகை ராஷ்மிகா மந்தனா மீது ஈர்ப்பா?: இன்ஸ்டாவில் ஷுப்மன் கில் பதில்!
பேட்டிங் காரணமாக கே.எஸ். பரத் நீக்கப்படுகிறாரா?: ஆகாஷ் சோப்ரா எழுப்பும் கேள்விகள்