புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அணியில் ஸ்ரேயஸ் ஐயர் இல்லாதது உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும்: ஹார்திக் பாண்டியா

முதுகில் ஏற்பட்ட காயத்தின் காரணத்தினால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து ஸ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளது உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தயார் செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும்

News image
Updated On :16 மார்ச் 2023, 4:06 pm

DIN

முதுகில் ஏற்பட்ட காயத்தின் காரணத்தினால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து ஸ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளது உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தயார் செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும்  ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் நாளை (மார்ச் 17) முதல் தொடங்குகிறது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாளை (மார்ச் 17) மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிறது. முதுகு வலி காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஸ்ரேயர் ஐயர் களமிறங்கவில்லை. காயம் காரணமாக ஸ்ரேயஸ் ஐயர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் எப்போது அணிக்குத் திரும்புவார் என்பது உறுதியாக தெரியவில்லை. 

இந்த நிலையில், முதுகில் ஏற்பட்ட காயத்தின் காரணத்தினால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து ஸ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளது உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தயார் செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹார்திக் பாண்டியா பேசியதாவது: உண்மையை சொல்லப்போனால் எங்களுக்கு நேரம் அதிகமாக இல்லை. இருக்கின்ற நேரத்தினை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் முதுகில் ஏற்பட்ட காயத்தினால் நீண்ட நாள்கள் அவதிப்பட்டேன். அதன் காரணத்தினால் இந்திய அணியில் நீண்ட நாள்கள் என்னால் இடம் பெற முடியாமல் இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் இல்லாதது கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். இது உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் அணியில் இல்லாததை நாங்கள் மிஸ் செய்கிறோம். ஆனால், நாங்கள் மெதுவாக நீண்ட கால தீர்வினைத் தேடி வருகிறோம்.

அவர் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்துவிட்டால் எங்களுக்கு அதை விட மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை. ஆனால், அவர் அணியில் இடம் பெற முடியாவிட்டால் அந்த தருணத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து அதிகம் சிந்திக்க வேண்டும். முதுகு வலியினால் அணியில் இடம் பெறாமல் இருந்த இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார் என நம்புகிறேன். ஜஸ்பிரித் பும்ரா சில நாட்களாக காயம் காரணமாக அணியில் இல்லை. அவர் அணியில் இடம் பெறாதது அணிக்கு பின்னடைவாக இருப்பினும், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகின்றனர். அவர்கள் பல ஆட்டங்களில் விளையாடி தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். அந்த அனுபவம் அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இஷான் மற்றும் ஷுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள். மைதானத்தின் தன்மை நன்றாக உள்ளது. நான் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இந்த மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறேன். இரு அணிகளுக்கும் போட்டி சவாலானதாகவே இருக்கப் போகிறது என்றார்.

ஒரு நாள் போட்டியின் வழக்கமான கேப்டனான ரோஹித் சர்மா சொந்த காரணங்களுக்காக முதல் ஒரு நாள் போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.