அன்னையர் தினத்தையொட்டி சென்னை சேப்பாக்கம் திடலில் எம்.எஸ். தோனியின் தாயாருக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் திடலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 61வது ஐபிஎல் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 முடிவில் ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்களை எடுத்தது.
இந்நிலையில், ஆட்டத்தின் இடையில் அரங்கிற்குள் அமர்ந்திருந்த ரசிகர்கள் சிலர், தோனி அம்மாவுக்கு நன்றி தெரிவித்து பதாகைகளை ஏந்திப் பிடித்தனர்.
நீங்கள் எங்களுக்கு தோனியை பரிசாக அளித்துள்ளீர்கள். நன்றி தேவகி அவர்களே. அன்னையர் தின வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு கோஷங்களை எழுப்பிய சம்பவம் அரங்கில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான புகைப்படங்களும் விடியோவும் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.