உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா ( 47 ரன்கள்), ஷுப்மன் கில் (80 ரன்கள்), விராட் கோலி (117 ரன்கள்), ஸ்ரேயஸ் ஐயர் (105 ரன்கள்) மற்றும் கே.எல்.ராகுல் (39 ரன்கள்) எடுத்து அசத்தினர். இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.
இப்போட்டியில் ரோஹித் சர்மா 4 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் தனிநபர் ஒருவராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். அவர் இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 28 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்
ரோஹித் சர்மா - 28 சிக்ஸர்கள் (2023)
கிறிஸ் கெயில் - 26 சிக்ஸர்கள் (2015)
ஸ்ரேயஸ் ஐயர் - 24 சிக்ஸர்கள் (2023)
இயான் மோர்கன் - 22 சிக்ஸர்கள் (2019)
கிளன் மேக்ஸ்வெல் - 22 சிக்ஸர்கள் (2023)
டேரில் மிட்செல் - 22 சிக்ஸர்கள் (2023)