

ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் 11வது நாளான இன்று, ஆண்கள் பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டார். அவர் 88.88 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் நாட்டுக்காக தங்கப்பதக்கத்தை அவர் பெற்றுள்ளார்.
அதற்கு அடுத்தபடியாக கிஷோர் குமார் ஜெனா 87.54 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டு தொடரில் 17 தங்கம், 28 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 76 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.