உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பைக்கான அணி விவரங்களை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் அணிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இறுதியான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 22) அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: காலில் விழுந்த வானதி சீனிவாசனுக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடி!
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் கூறியதாவது: ஹாசன் அலி அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். துரதிருஷ்டவசமாக காயம் காரணமாக உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷாவால் இடம்பெற முடியவில்லை. அவர் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்று வீரர்களாக முகமது ஹரிஷ், அப்ரார் அகமது மற்றும் ஸாமன் ஷா பாகிஸ்தான் அணியினருடன் பயணிக்கின்றனர் என்றார்.
உலகக் கோப்பை தொடரின் முதன்மையானப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக பாகிஸ்தான் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. செப்டம்பர் 29 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராகவும், அக்டோபர் 3 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தான் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணைக் கேப்டன்), முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக், அப்துல்லா சஃபீக் , சௌத் ஷகீல், ஃபகர் ஸமான், ஹரிஷ் ரௌஃப், ஹாசன் அலி, இஃப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது வாசிம், அஹா சல்மான், ஷகின் ஷா அஃப்ரிடி மற்றும் ஒசாமா மிர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு 10 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



