ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் பல்வேறு உலக சாதனைகளை நேபாள அணி நிகழ்த்தியுள்ளது.
ஆண்கள் கிரிக்கெட் குரூப் சுற்றில் மங்கோலியா அணியும், நேபாள அணியும் மோதின. டாஸ் வென்ற மங்கோலியா அணி பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி 3 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய மங்கோலியா 41 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சுமார் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேபாள அணி சாதனை படைத்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்த போட்டியில் பல்வேறு உலக சாதனைகளை நேபாள அணி படைத்துள்ளது.
அதுமட்டுமின்றி, நேபாள வீரர் சந்தீப் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதேபோல், இந்த போட்டியில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன.
இந்த பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் நேரடியாக காலிறுதி போட்டியில் களம் காணவுள்ள நிலையில், குரூப் போட்டிகளில் முன்னிலை பெறும் 4 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.