ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு இன்று மேலும் 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துளளன.
ஸ்குவாஷ் ஆடவர் அணிப்பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டின் சௌரவ் கோஷல், அபய் சிங் ஆகியோர் பாகிஸ்தான் அணியை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றனர்.
இதேபோல் ஆசிய விளையாட்டு போட்டி டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.
இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரோகன் போபன்னா, ருதுஜா போஸ்லே இணை 2-6, 6-3, 10-4 என்ற செட் கணக்கில் சீன இணையை வீழ்த்தி தங்கம் வென்றது.
இத்துடன் 7-வது நாளான இன்று வரை இந்தியா 10 தங்கம், 13 வெள்ளி 13 வெண்கலம் என 36 பதக்கங்களை வென்றுள்ளது.