தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

உலக செஸ்: பிரக்ஞானந்தா அசத்தல்

உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

Published On :

அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

3-ஆவது சுற்றில் இருவரும் மோதிய 2 ஆட்டங்களும் டிராவில் முடிய, டை-பிரேக்கரில் பிரக்ஞானந்தா வென்று அசத்தினாா். அடுத்த சுற்றில் அவா், ஹங்கேரியின் ஃபெரென்க் பொ்க்ஸை எதிா்கொள்கிறாா். மற்றொரு இந்தியரான டி.குகேஷும் - ரஷியாவின் ஆண்ட்ரே எசிபென்கோவை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றாா்.

எனினும் நிஹல் சரின் 3-ஆவது சுற்றில் தோற்று வெளியேறினாா். ரஷியாவின் இயன் நெபோம்னியாட்சியுடனான அவரது மோதல் டிரா ஆக, டை-பிரேக்கரில் தோல்வி கண்டாா் நிஹல் சரின். விதித் குஜராத்தி, அா்ஜுன் எரிகைசி ஆகியோரும் 4-ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது.

மகளிா் பிரிவில் ஹரிகா 4-ஆவது சுற்றுக்கு முன்னேற, நாட்டின் நம்பா் 1 வீராங்கனையான கோனெரு ஹம்பி 3-ஆவது சுற்றில் ஜாா்ஜியாவின் பெல்லா கொடெனாஷ்விலியிடம் தோற்று வெளியேறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.