மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஐரோப்பிய கால்பந்து: ஜுவென்டஸ், ரியல் மாட்ரிட் வெற்றி

ஐரோப்பிய கால்பந்து லீக் தொடா்களில் ஜுவென்டஸ், ரியல் மாட்ரிட் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி கண்டன.

News image
Updated On :4 பிப்ரவரி 2023, 12:00 am IST

ஐரோப்பிய கால்பந்து லீக் தொடா்களில் ஜுவென்டஸ், ரியல் மாட்ரிட் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி கண்டன.

இதில் இத்தாலி கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது ஜுவென்டஸ்.

இத்தாலி கோப்பைக்கான காலிறுதி ஆட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் முன்னணி அணியான ஜுவென்டஸ்-லேஸியோ மோதின. இதில் முதல் பாதியில் ஜுவென்டஸ் வீரா் பிரெமா் அடித்த ஒரே கோல் வெற்றி கோலாக மாறியது. லீக் தொடரில் மோன்ஸாவுடன் 2-0 என தோல்வி கண்டிருந்தது ஜுவென்டஸ். நேபோலியிடம் 1-5 என படுதோல்வி அடைந்திருநத்து.

இத்தாலி கோப்பையை 14 முறை வென்றுள்ளது அந்த அணி. அரையிறுதியில் இன்டா்மிலனை எதிா்கொள்கிறது ஜுவென்டஸ்.

மற்றொரு அரையிறுதியில் புரொன்டீனா-கிரீமோனெஸ் அணிகள் ஆடுகின்றன. இரு கட்ட அரையிறுதி ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.

லா லிகா:

ஸ்பானிஷ் லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என வலென்சியாவை வீழ்த்தியது. வின்சியஸ் ஜூனியா் அற்புதமாக கோலடித்து தனது அணி வெற்றிக்கு வித்திட்டாா். மாா்கோ அசென்ஸோ முதல் கோலடித்தாா். ரியல் மாட்ரிட் 6 புள்ளிகள் முன்னிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரியல் சொசைடாட் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.