கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆச்சர்யமடைந்த மஞ்ச்ரேக்கர்: முரளி விஜய் கோபம்!

தென்னிந்திய வீரர்களை மும்பை வீரர்கள் பாராட்டுவதில்லை என குற்றம் சாட்டியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் முரளி விஜய்.

News image
Updated On :10 பிப்ரவரி 2023, 12:11 pm

DIN

தென்னிந்திய வீரர்களை மும்பை வீரர்கள் பாராட்டுவதில்லை என குற்றம் சாட்டியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் முரளி விஜய்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 2-வது நாளன்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடி வருகிறது. 

இன்றைய தொலைக்காட்சி ஒளிபரப்பில் சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்டுகளில் அரை சதத்தைச் சதமாக மாற்றுவது குறித்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது. அதில் முதல் இடத்தில் இருந்தார் முரளி விஜய். ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் அவருக்குப் பின்னால் இருந்தார்கள். இந்தப் புள்ளிவிவரத்தைப் பார்த்து வர்ணனையில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆச்சர்யமடைந்தார். இதையடுத்து முரளி விஜய் ட்விட்டரில் கூறியதாவது:

ஆச்சர்யமா உங்களுக்கு? மும்பையைச் சேர்ந்த சில முன்னாள் வீரர்கள் ஒருபோதும் தென்னிந்திய வீரர்களைப் பாராட்டுவதில்லை என்றார். 

ரோஹித் சர்மா இன்று சதமடித்த பிறகு, வர்ணனையில் முரளி விஜய்க்குப் பதில் அளிக்கும் விதமாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:

அரை சதத்தைச் சதமாக மாற்றுவதில் ரோஹித் சர்மா தற்போது 2-வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் முரளி விஜய் இருப்பது நல்ல விஷயம். அவரைப் போன்றவர்கள் செய்த பங்களிப்பை நாம் மறந்து விடுகிறோம். 12 சதங்கள், அதில் 9 சதங்கள் சொந்த மண்ணில் எடுக்கப்பட்டவை. அபாரமாக விளையாடி இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்றார். 

இந்திய அணிக்காக 2008 முதல் 61 டெஸ்டுகள், 17 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் முரளி விஜய். டெஸ்டில் 12 சதங்கள், 15 அரை சதங்களுடன் 3982 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்காகக் கடைசியாக 2018-ல் பெர்த் டெஸ்டில் விளையாடினார். தமிழ்நாடு அணிக்காகக் கடைசியாக 2019-ம் ஆண்டிலும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2020-ம் ஆண்டிலும் விளையாடினார். அதன்பிறகு தொழில்முறை கிரிக்கெட்டில் அவர் பங்கேற்கவில்லை. சமீபத்தில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முரளி விஜய் அறிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.