மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

சொந்த மண்ணில் அதிகமுறை 5 விக்கெட்டுகள்: கும்ப்ளே சாதனையைச் சமன் செய்த அஸ்வின்!

சொந்த மண்ணில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின். 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 11:59 am IST

சொந்த மண்ணில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின். 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவில் 25 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இதன்மூலம் இதே இலக்கைத் தொட்ட கும்ப்ளேவின் சாதனையைச் சமன் செய்துள்ளார். கும்ப்ளே 115 இன்னிங்ஸிலும் அஸ்வின் 101 இன்னிங்ஸிலும் நிகழ்த்தியுள்ளார்கள். சொந்த மண்ணில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் - முரளிதரன் (45), ஹெராத் (26). 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.