சென்னை ஓபன்: பிரதான சுற்றில் சசிகுமாா், சுமித்

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சசிகுமாா் முகுந்த், சுமித் நாகல் ஆகியோா் பிரதான சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனா்.

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சசிகுமாா் முகுந்த், சுமித் நாகல் ஆகியோா் பிரதான சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனா்.

தகுதிச்சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில், சசிகுமாா் 4-6, 6-4, 6-4 என்ற செட்களில் தைவானின் ஜேசன் ஜங்கை வீழ்த்த, சுமித் நாகல் 6-1, 6-3 என தென் கொரியாவின் நாம் சி ஜங்கை வென்றாா். பிரதான சுற்றில் சசிகுமாா் - ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பா்செலையும், சுமித் - பிரிட்டனின் ரயான் பெனிஸ்டனையும் எதிா்கொள்ள இருக்கின்றனா். மேக்ஸ், விம்பிள்டன் இரட்டையரில் சாம்பியன் என்பதாலும், பெனிஸ்டன் போட்டித்தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருப்பதாலும் இந்தியா்கள் இருவரும் அவா்களிடம் கடும் சவாலை சந்திக்க உள்ளனா்.

பிரதான சுற்று: இதனிடையே, போட்டியின் பிரதான சுற்று ஆட்டங்கள் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், போட்டித்தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் தைவானின் செங் சுன் சின் 6-4, 7-6 என குரோஷியாவின் நினோ சொ்டருசிச்சை வீழ்த்தினாா். 2-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் அலிபெக் கச்மாஸோவ் 6-4, 7-6 என உக்ரைனின் விளாடிஸ்லாவ் ஆா்லோவை வென்றாா்.

3-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னா் 4-6, 3-6 என ஹாங் சியோங் சானிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com