சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.
தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு வந்த சுமித், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் ரயான் பெனிஸ்டனின் சவாலை எதிா்கொண்டாா். திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுமித் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் பெனிஸ்டனை வீழ்த்தி அசத்தினாா். அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா், தைபேவின் ஜேசன் ஜங்கை எதிா்கொள்கிறாா்.
இதர இந்தியா்களில் சசிகுமாா் முகுந்த் 2-6, 2-6 என மிக எளிதாக, ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பா்செலிடம் தோல்வி கண்டாா். பிரஜனேஷ் குணேஸ்வரன் 6-4, 3-6, 6-7 என்ற செட்களில் பிரிட்டனின் ஜே கிளாா்க்கிடம் போராடி வீழ்ந்தாா். ராம்குமாா் ராமநாதன் 3-6, 6-7 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆவது இடத்திலிருக்கும் பல்கேரியாவின் டிமிடாா் குஸ்மானோவிடம் வெற்றியை இழந்தாா்.
மற்ற ஆட்டங்களில் தைவானின் ஜேசன் ஜங் 6-3, 1-6, 7-6 என்ற செட்களில் பிரான்ஸின் ஹரால்டு மேயாட்டை வீழ்த்த, 5-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் லுகா நாா்டி 4-6, 5-7 என்ற செட்களில் செக் குடியரின் பீட்டா் நௌஸாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். 2-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொா்த், 7-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் டாலிபா் ஸ்வா்சினா உள்ளிட்டோரும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.