24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!சென்னை ஐஐடியில் ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய்- மகன்!மூன்றாவது மொழி! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு!மீண்டும் தலைதூக்கும் கரோனா பாதிப்பு! இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் இரட்டையர்கள்! ஆதார் புதுப்பிக்க என்னதான் வழி?அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமிஅகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
/

ஷர்துல் தாக்குருக்கு இப்போதுதான் திருமணம் ஆகியிருக்கிறது...: ரோஹித் சர்மா

இந்திய அணி 3-வது டெஸ்டை வென்றால் ஆமதாபாத் டெஸ்டில் வீரர்கள் தேர்வில் மாற்றம் ஏற்படும் என...

News image
Updated On :28 பிப்ரவரி 2023, 3:24 pm IST

இந்திய அணி 3-வது டெஸ்டை வென்றால் ஆமதாபாத் டெஸ்டில் வீரர்கள் தேர்வில் மாற்றம் ஏற்படும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட், இந்தூரில் நாளை (மார்ச் 1) தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. 

3-வது டெஸ்டை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியா தகுதியடைந்து விட்டால் 4-வது டெஸ்டில் அணியில் மாற்றம் செய்து இறுதிச்சுற்றுக்கான பயிற்சியாக மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என ரோஹித் சர்மா இன்று தெரிவித்துள்ளார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி பற்றி இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தயாராவது பற்றி ஏற்கெனவே நாங்கள் பேசியுள்ளோம். அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முக்கியமான ஒரு வீரர், ஷர்துல் தாக்குர். எங்களுடைய திட்டங்களில் அவர் உள்ளார். அவருக்குத் தற்போதுதான் திருமணமாகியுள்ளது. எனவே 4-வது டெஸ்டுக்கு எந்தளவுக்குத் தயாராக உள்ளார் எனத் தெரியவில்லை. சமீபத்தில் அவர் எத்தனை ஓவர்கள் வீசினார் எனத் தெரியாது. ஆனால் அதற்கான திட்டங்களில் நாங்கள் உள்ளோம். எங்களுக்கான முடிவு இந்தூர் டெஸ்டில் கிடைத்துவிட்டால் ஆமதாபாத் டெஸ்டில் புதிதாக முயற்சி செய்வோம். இங்கிலாந்து ஆடுகளம் இரு அணிகளுக்கும் வித்தியாசமாக இருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி நான் பேச விரும்பவில்லை. இன்னும் நாங்கள் தகுதியடையவில்லை. இந்தூர் டெஸ்டை வென்ற பிறகு அதைப் பற்றி பேசலாம். அதுதான் சரியானதாக இருக்கும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.