லண்டனில் நடைபெறும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை!
4வது நாள் முடிவில் இங்கிலாந்து 114/4 ரன்கள் எடுத்தது. இதில் பவுன்ஸர் பந்துகளுக்குதான் அதிக விக்கெட்டுகள் கிடைத்தது.
Stop that Joe Root! #EnglandCricket | #Ashes pic.twitter.com/IYHnLq5q69
â England Cricket (@englandcricket) July 1, 2023
இதையும் படிக்க: பாட் கம்மின்ஸ் என்னை பேட் செய்ய வேண்டாம் என்றார்: நாதன் லயன்
குறிப்பாக இங்கிலாந்து அணி இந்த உத்தியை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. கவாஜா, ஸ்மித், ஹெட், கிரீன், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், லயன் என பவுன்சர் பந்துகளில் மட்டுமே விக்கெட்டுகள் விழுந்தது. இந்த ஆட்டம் குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Another short ball.
â England Cricket (@englandcricket) July 1, 2023
Another wicket!
YES LADS! #EnglandCricket | #Ashes pic.twitter.com/xj5wHLzJ6I
முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் டைலர், “பேட்ஸ்மேன் ஷாட் விளையாடாவிட்டால் ஒரு ஓவருக்கு எத்தனை பவுன்சர்கள் போட வேண்டும்? இந்த யுக்தியை இரண்டு அணிகளும் பயன்படுத்தினல வெற்றி கிடைக்கும். 90களுக்கு முன்பு ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் மட்டுமே அனுமதி, பின்னர் 90களுக்கு மத்தியில் ஒரு ஓவருக்கு 2 என்றானது. பழைய அச்சுறுத்தும் விதி அப்படியேதான் உள்ளது. இதை நடுவர் உணர்ந்தால் நோ பால் கொடுக்கலாம். தோள்பட்டைக்கு மேல் இல்லாமல் இருந்தாலும் ஒரே லென்தில் பந்து வீசுவது அச்சுறுத்துவதுதான். இது நடுவருக்கு சவாலானது. நானாக இருந்தால் நோ பால் தருவேன். 70களில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒருமணி நேரம் பவுன்சர்களாக வீசினார்கள். பிறகுதான் விதிகள் மாற்றப்பட்டது” எனக் கூறினார்.
இதற்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், “இது அச்சுறுத்துவது அல்ல, விக்கெட்டுகளை எடுப்பது” என மறுப்பு கூறினார். இது சமூக வலைதளங்கலில் பேசுபொருளாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!

பாரதி ஏர்டெல்லின் முதல் காலாண்டு லாபம் 37.3% அதிகரிப்பு!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்! விடியோ வைரல்!

மீண்டும் வாய்ப்பு! குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைவிரல் ரேகை பதிவு முகாம்!
விடியோக்கள்

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில்! | திருக்கோயில் வலம் | Murugan temple



