பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சச்சினுக்கு அடுத்த இடத்தை கைப்பற்றிய ஸ்மித்! 

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் முன்னாள் வீரர் சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார். 

News image
Updated On :3 ஜூலை 2023, 2:49 pm IST

99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 9113 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள், 37 அரைசதங்கள் அடங்கும். ஐசிசி சிறந்த பேட்டர் வரிசையில் 6வது இடத்தில் உள்ளார். ஆஷஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். டான் பிராட்மேனுடன் ஒப்பிடும் அளவுக்கு திறமையான பேட்டர்.  

சமீபத்தில் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் 1000 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்தார்.  

இந்நிலையில் 2வது ஆஷஸ் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதன் மூலம் டெஸ்டில் 13 ஆட்ட நாயகன் விருதுனை பெற்று சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். சச்சின் 200 போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றதை ஸ்மித் 99 போட்டிகளிலே 13 முறை எடுத்து அசத்தியுள்ளார். 

மேலும், இங்கிலாந்திற்கு எதிராக மட்டும் 34 போட்டிகளில் 8 முறை ஆட்ட நாயகன் விருது பெற்று ஸ்மித் அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்றது ஜாக் காலிஸ் (23) என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.