பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

முதல் டி20: வங்கதேசத்தை எளிதாக வீழ்த்திய இந்திய மகளிர் அணி

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Photo : Courtesy BCCI Women Twitter

Published On :

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - வங்கதேச மகளிர் அணிகள் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கின்றன. இதில் முதல் டி20 ஆட்டம் மிர்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியால் நிலைத்து ஆடமுடியவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியால் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக அந்த அணியில் ஷோர்னா அக்டர் 28, சோபனா மோஸ்டரி 23, ஷாதி ராணி 22 ரன்கள் எடுத்தனர். பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஸ்மிருதி மந்தனா 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் அரைசதம் எடுத்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.

ஹர்மன்ப்ரீத் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.