மலேசிய அணியை வீழத்தி ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரை எகிப்து அணி வென்றது.
சென்னையில் இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் மலேசியா, எகிப்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசிய அணியை 4-1 என்ற கணக்கில் வீழத்தி எகிப்து அணி கோப்பையை தட்டிச் சென்றது.
ஸ்குவாஷ் உலகக்கோப்பையில் இந்தியா, ஜப்பான் அணிகள் மூன்றாம் இடம் பிடித்தன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய விதிமுறைகளுடன் ஸ்குவாஷ் உலகக்கோப்பை சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.