தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.
உலகக் கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் இது அவருடைய 49-வது சதமாகும். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் விளாசி முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் டெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 119 பந்துகளில் சதம் விளாசினார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும்.
சச்சின் டெண்டுல்கர் 452 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், தற்போது விராட் கோலி 277 போட்டிகளில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை விராட் கோலி அவரது 35-வது பிறந்தநாளான இன்று (நவம்பர் 5) சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சருக்கு திடீா் மயக்கம்

சதுரகிரி கோயிலில் தினசரி மலையேற இடைக்காலத் தடை: அறநிலையத் துறை மனு தாக்கல் செய்து வழிபாட்டு உரிமையைக் காக்கக் கோரிக்கை

போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் தவெக நிா்வாகி மீது வழக்கு






