ஒருநாள் போட்டியா? டெஸ்ட்டா? திணறும் தெ.ஆ. அணி!
உலகக் கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதி வருகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற தெ.ஆ. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா ரன் எடுக்கமால் அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குவிண்டன் டி காக்கும் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இதையும் படிக்க: அபார பந்துவீச்சு: ஷமிக்கு முத்தமளித்த அஸ்வின்!
தற்போது, முதல் பவர் பிளேவில் 10 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸி. பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 2 விக்கெட்களை இழந்து 18 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது தெ.ஆ. அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.