புதுதில்லி: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் விற்பனை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தைக் குறியீடுகள் வெகுவாக சரிந்தன. இதன் விளைவாக முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 6.31 லட்சம் கோடி குறைந்தது.
தொடர்ந்து 2வது நாளாகச் சரிந்த சென்செக்ஸ் 719.08 புள்ளிகள் சரிந்து 73,524.26 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 243.70 புள்ளிகள் சரிந்து 23,123 புள்ளிகளாக நிலைபெற்றது.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதால் உலகளாவிய சந்தை பலவீனமடைந்ததது. அதே வேளையில், கச்சா எண்ணெய் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர் என்ற நிலையை நோக்கி பயணித்தது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பப் பங்குகளின் ஏற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியதால் உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் விற்பனைக்கு உள்ளாகின.
இதனையடுத்து, ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 6,31,440.41 கோடி குறைந்து ரூ. 4,55,28,758.96 கோடியாக உள்ளது.
Summary
Investors wealth dropped Rs 6.31 lakh crore on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: இந்திய பங்குச் சந்தை 1%க்கும் மேல் உயர்வு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 95.73! 63 காசுகள் உயர்வு!

பங்குச் சந்தை மீட்சி: வங்கி பங்குகள் உயர்வு!!

சரிந்து, மீண்டு பிறகு சரிந்த பங்குச் சந்தை: ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




