வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

இதுதான் தோல்விக்கு காரணம்: இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி ஏற்படக் காரணம் இதுதான் என இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் கூறியுள்ளார். 

News image
Updated On :17 அக்டோபர் 2023, 3:31 pm IST

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், லக்னெளவில் நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் இலங்கையும், ஆஸ்திரேலியா அணியும் திங்கள்கிழமை மோதின.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை கேப்டன் தசுன் ஷானகா காயம் காரணமாக வெளியேற குசால் மெண்டிஸ் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆஸி.க்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றார். இந்தப் போட்டியின் தோல்வி குறித்து குசால் மெண்டிஸ் கூறியதாவது: 

நிசாங்கா, பெராரே நன்றாக பேட்டிங் செய்தார்கள். அவர்களது விக்கெட்டுக்குப் பிறகு நாங்கள் தடுமாற ஆரம்பித்தோம். 290 அல்லது 300 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் குறைவான ரன்களே எடுத்தோம். ஸ்டிரைக்கினை ரொடேட் செய்ய முடியவில்லை. கடைசி 2 போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்தோம். எங்களது பேட்டிங் அணி மீது நம்பிக்கையுள்ளது. மதுஷனகா சிறப்பாக பந்து வீசினார். இன்னும் கொஞ்சம் நாங்கள் சிறப்பாக ஃபீல்ட் செய்திருக்கலாம். பதிரானா விரைவில் நலம் பெறுவாரென நம்புகிறேன் எனக் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.