ஐபிஎல் 2009இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன்முதலாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்திய அணியில் ஒருநாள், டி20 போட்டிகளில் 2010இல் தேர்வானார். டெஸ்டில் 2011இல் களமிறங்கினார்.
சிஎஸ்கே அணியில் 6 ஆண்டுகள் இருந்த அஸ்வின் பல மறக்க முடியாத இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இந்திய அணியில் சிறந்த சுழல்பந்து வீச்சாளராக திகழ்கிறார். சிறந்த ஐசிசி பௌலர், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிரண்டு இடங்களை பிடித்து அசத்தியுள்ளார்.
இதையும் படிக்க: ஆசிய கோப்பை: அக்ஷர் படேல் விலகல்? அவருக்கு பதிலாக தமிழக வீரர்!
இதையும் படிக்க: கமல் 234: இயக்குநர் மணிரத்னமிடம் அப்டேட் கேட்ட லோகேஷ்!
இதையும் படிக்க: தலைவர் 171: அப்டேட் கூறிய நடிகர் ரஜினிகாந்த்!
அஸ்வின் இந்த சாதனைகள் மட்டுமின்றி அவரது சமயோசிதமான கிரிக்கெட் செயல்பாடுகளுக்கு பெயர்போனவர். மன்கட் ரன் அவுட்டை நடைமுறைப் படுத்துவதில் அஸ்வின் செய்தது தனிப் புரட்சி எனலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் என அஸ்வின் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்து முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ் உள்பட பலரும் இந்திய தேர்வுக்குழு மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அஸ்வினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.