நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அணியில் தேர்வாகாதது குறித்து சஞ்சு சாம்சனின் வைரலாகும் பதிவு! 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வாகாதது குறித்து பதிவிட்டுள்ளார். 

News image

படம்: இன்ஸ்டாகிராம் | சஞ்சு சாம்சன்

Updated On :19 செப்டம்பர் 2023, 4:15 pm IST

13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 390 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.71 என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பை, உலகக் கோப்பை, ஆசிய போட்டிகள் என எதிலும் சஞ்சு சாம்சன் தேர்வாகவில்லை. 

உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அதற்கான அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.

முதலிரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுல் தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது. 3வது போட்டியில் ரோஹித் தலைமையில் களமிறங்குகிறது. இதில் எந்த அணியிலும் சஞ்சு சாம்சன் தேர்வாகவில்லை. 

Story image

ஐது குறித்து தனது முகநூல் பக்கத்தில் சஞ்சு சாம்சன் சோகம் கலந்த சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 

Story image

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாம்சன், “இதுதான் நான். இங்கிருந்து நான் முன்னேற நினைக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். அதில் தான் பேட்டிங் விளையாடும் புகைப்படத்தினையும் பதிவிட்டுள்ளார். 

முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், “நான் சஞ்சு சாம்சன் நிலையில் இருந்தால் நிச்சயமாக ஏமாற்றமடைந்திருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார். பலரும் சாம்சனுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.