நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

உலகக் கோப்பை போட்டியிலிருந்து ஹசரங்கா விலகல்!

பிரபல இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image

படம்: எக்ஸ் | ஹசரங்கா

Updated On :24 செப்டம்பர் 2023, 12:29 pm IST

பிரபல இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 48 ஒருநாள் போட்டிகளில் 832 ரன்களும் 67 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இலங்கை அணிக்கு முக்கியமான ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார். ஆசிய கோப்பை போட்டியிலும் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார் ஹசரங்கா. 

இதற்கு முன்பாக லங்கா ப்ரீமியர் லீக்கில் அதிகபட்ச ரன்கள் எடுத்தவரும் அதிக விக்கெட்டுகள் எடுத்தவருமாக ஹசரங்கா அசத்தினார். 

தசைப்பிடிப்பு காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் செப்.28ஆம் தேதி உலகக் கோப்பை போட்டி அணிக்கான கடைசி மாறுதல்களை அறிவிக்கலாம் என்பதால் இன்னும் 4 நாள்கள் இருக்கிறது. 

ஏற்கனவே மதீஷா தீக்‌ஷானா ஆசிய கோப்பை போட்டியின்போது காயமடைந்தார். இருப்பினும் அவர் விரைவில் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஹசரங்காவின் இழப்பு இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்குமென கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அக்.5ஆம் தேதி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி முதல் போட்டி அக்.7ஆம் நாள் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.