மகளிர் தனிநபர் சப்ரே பிரிவில் களமிறங்கிய தமிழக வீராங்கனை பவானி தேவி, குரூப் சுற்றில் தன்னை எதிர்கொண்ட 5 போட்டியாளர்களையுமே வென்றார். முதலில் சிங்கப்பூரின் ஜூலியட் ஜி மின் ஹெங்கையும் (5-2), அடுத்து சவூதி அரேபியாவின் அல்ஷ்னா அல்ஹமதையும் (5-1) சாய்த்த பவானி தேவி, 3-ஆவது ஆட்டத்தில் கரினா தோஸ்பேவை (5-3) சாய்த்தார். அடுத்த இரு மோதல்களில் உஸ்பெகிஸ்தானின் ஜேனாப் தயிபெகோவாவையும், வங்கதேசத்தின் ரோக்சனா காட்டுனையும் (5-1) வெற்றி கண்டார்.
இதனால் "பை' பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்த அவர், அதில் தாய்லாந்தின் டோங்காவ் போகேவை வீழ்த்தினார். எனினும் காலிறுதியில் சீனாவின் யாகி ஷாவிடம் 7-15 என தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். காலிறுதியில் வெல்லும் பட்சத்தில் பவானி தேவிக்கு முதல் ஆசிய பதக்கம் உறுதியாகியிருக்கும்.