சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

2-வது டெஸ்ட்: இங்கிலாந்தின் வெற்றிக்கு 332 ரன்கள் தேவை!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 1:41 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக ஷுப்மன் கில் 34 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர் மற்றும் ரீஹன் அகமது தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டாம் ஹார்ட்லி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். 

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸாக் கிராலி 76 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 104 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் டாம் ஹார்ட்லி 4  விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரீஹன் அகமது 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், சோயிப் பஷீர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 398 ரன்கள் முன்னிலை பெற்றது. 

399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 67  ரன்கள் குவித்துள்ளது. பென் டக்கெட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸாக் கிராலி 29 ரன்களுடனும், ரீஹன் அகமது 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். போட்டி முடிவடைய இன்னும் இரண்டு நாள்கள் இருக்க, இங்கிலாந்தின் வெற்றிக்கு 332 ரன்கள் தேவைப்படுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.