குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

டி20 உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றுவர்: தென்னாப்பிரிக்க வீரர்

டி20 உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என தென்னாப்பிடிக்க வீரர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :10 பிப்ரவரி 2024, 4:11 pm IST

டி20 உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என தென்னாப்பிடிக்க வீரர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பை டி20 தொடர் வருகிற ஜூன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை நிறைவடைந்த சில மாங்களிலேயே உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் தங்களை உலகக் கோப்பை டி20 தொடருக்காக தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். இருதரப்பு தொடர்கள் மற்றும் ஐபிஎல் தொடர் போன்றவை உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக அமையவுள்ளது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என தென்னாப்பிடிக்க வீரர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள். ஆடுகளம் சிறப்பானதாக மாறி வருகிறது. பவுண்டரிகள் சிறிதாகி வருகின்றன. அதனால் அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் வித்தியாசமான பந்துகளை வீச வேண்டியுள்ளது. டி20 லீக் போட்டிகள் சர்வதேச டி20 போட்டிகளில் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு உதவியாக இருக்கும். ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் எனக்கு கிடையாது. இருப்பினும் தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடியுள்ளேன். இது போன்ற டி20 தொடர்கள் உள்ளூர் வீரர்களுக்கு அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்களிடம் பழகி நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வழிவகுக்கும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.