லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பந்துவீச்சுக்கு திரும்புவது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ்!

இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் பந்துவீசுவது குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.

News image
பென் ஸ்டோக்ஸ்
Updated On :22 பிப்ரவரி 2024, 10:56 am

DIN

இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் பந்துவீசுவது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை (பிப்ரவரி 23) முதல் ராஞ்சியில் தொடங்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அதன்பின் இங்கிலாந்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.

இந்திய அணியைக் கட்டுப்படுத்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் பந்துவீச்சில் ஈடுபட வேண்டும் என்ற கருத்துகளும் எழுந்தன. அதற்கு ஏற்றவாறு பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் பந்துவீசுவது குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான நாளை நடைபெறும் 4-வது டெஸ்ட் போட்டியில் நான் பந்துவீசலாம் அல்லது பந்துவீசாமலும் இருக்கலாம். இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவது இங்கிலாந்துக்கு சிறந்த தெரிவாக இருக்கும் என்றார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இரண்டாவது ஆஷஸ் போட்டியின்போது பென் ஸ்டோக்ஸ் கடைசியாக பந்துவீசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.