இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று (பிப்ரவரி 22) வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் ஐபிஎல் தொடரின் முதல் பாதி அட்டவணை மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டத்தின் முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை எதிர்கொள்கிறது.
தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.