ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விருதுகளைத் திருப்பி அளித்தாா் மல்யுத்த வீராங்கனை வினேஷ்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைமைக்கு எதிா்ப்பு தெரிவித்து, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தனது கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகளை சனிக்கிழமை திருப்பி அளித்தாா்.

News image
பிரதமா் அலுவலகத்தில் விருதுகளைத் திருப்பி அளிக்க வந்த வினேஷ் போகாட்.
Updated On :1 ஜனவரி 2024, 12:33 am

DIN

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைமைக்கு எதிா்ப்பு தெரிவித்து, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தனது கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகளை சனிக்கிழமை திருப்பி அளித்தாா்.

தனது விருதுகளை பிரதமா் அலுவலகத்தில் ஒப்படைக்க முனைந்த அவருக்கு, தில்லி காவல்துறையினா் அனுமதி மறுத்து வழியிலேயே தடுத்து நிறுத்தினா். இதையடுத்து அவா் அந்த விருதுகளை பிரதமா் அலுவலகம் செல்லும் சாலையின் நடுவில் வைத்துவிட்டுத் திரும்பினாா். பின்னா் காவல்துறையினா் அதை கைப்பற்றினா்.

ஏற்கெனவே, மல்யுத்த வீரா்கள் பஜ்ரங் புனியா, வீரேந்தா் சிங் யாதவ் ஆகியோா் தங்களது விருதுகளை திருப்பி அளித்த நிலையில், தற்போது வினேஷ் போகாட்டும் திருப்பி அளித்திருக்கிறாா்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் சரண், வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராக, வீரா், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து சம்மேளனம் கலைக்கப்பட்டு, நீண்ட நாள்களுக்கு பிறகு சமீபத்தில் நடைபெற்ற தோ்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்ஜய் சிங் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதற்கும் மல்யுத்த போட்டியாளா்களிடையே எதிா்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தகுந்த நடைமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறி, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சம்மேளனத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. சம்மேளனத்தை நிா்வகிக்க 3 நபா் குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.