நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஸ்டீவ் ஸ்மித்தின் டென்னிஸ் திறமைக்கு தலைவணங்கிய ஜோகோவிச்: வைரல் விடியோ! 

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டென்னிஸ் விளையாடியதை ரசித்த ஜோவிச்சின் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

News image

படங்கள்: எக்ஸ் | ஆஸ்திரேலிய ஓபன்

Updated On :11 ஜனவரி 2024, 7:56 pm IST

2010இல் டெஸ்டில் சுழல் பந்து வீச்சாளராக அறிமுகமானவர் ஸ்டீவ் ஸ்மித். பின்னர் தனது அபாரமான பேட்டிங் திறமையினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்ற நிலையை அடைந்துள்ளார். 

105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் 9,514 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 இரட்டை சதங்கள், 32 சதங்கள், 40 அரைசதங்கள் அடங்கும். சராசரி 58.01 என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. விரைவில் டெஸ்டில் 10 ஆயிரம் ரன்களை தொட இருக்கிறார். 

நாளை தொடங்கி ஜன.28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி. இதற்காக நட்பு ரீதியாக டென்னிஸ் உலகில் நட்சத்திர வீரராக இருக்கும் ஜோகோவிச் உடன் மெல்போர்ன் நகரில் நடந்த போட்டியில் ஸ்மித் டென்னிஸ் ஆடினார்.

இதில் ஜோகோவிச்சின் சர்வீஸை எதிர்கொண்ட ஸ்மித் திறமையாக அடித்து ஆடுவார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஆச்சரியமடைந்த ஜோகோவிச் தலைவணங்கி பாராட்டுவார். 

அதேபோல ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார். ஆனால் அவரால் பந்தினை அடிக்க முடியவில்லை. இந்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் கிரிகெட், டென்னிஸ் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.