இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஹைதராபாத் ஆடுகளம் நல்ல ஆடுகளமாக இருக்குமென எதிர்பார்ப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 25) ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஹைதராபாத் ஆடுகளம் நல்ல ஆடுகளமாக இருக்குமென எதிர்பார்ப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள ஹைதராபாத் ஆடுகளத்தின் தன்மை குறித்து கூறுவது கடினமான ஒன்று. போட்டி தொடங்கிய பிறகே ஆடுளத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பது தெரியும். நான் பார்த்த வரையில் ஆடுகளம் நன்றாக இருக்குமென தோன்றுகிறது. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என என்னால் உறுதியாக கூற முடியவில்லை என்றார்.