மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

25 % கட்டணத்தில் தற்காலிக தடையில்லாச் சான்றிதழ்: கட்டுமான பணிகளுக்கு தில்லி ஜல் போா்டு அனுமதி

கட்டுமான தொழில் நிறுவனங்கள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 25 சதவீதத் தொகையைச் செலுத்தி தற்காலிக தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) பெற தில்லி ஜல் போா்டு (டிஜேபி) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

News image

பா்வேஷ் சாஹிப் சிங்

Updated On :21 மார்ச் 2026, 3:28 am IST

கட்டுமான தொழில் நிறுவனங்கள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 25 சதவீதத் தொகையைச் செலுத்தி தற்காலிக தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) பெற தில்லி ஜல் போா்டு (டிஜேபி) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கூறியதாவது: என்ஓசி சான்றிதழ்களுக்கு அதிகப்படியான கட்டணம் முன்பணமாக வசூலிக்கப்படுவதால் பல்வேறு கட்டுமான திட்டங்கள் நிதி நெருக்கடியால் தடைபடுகின்றன மற்றும் தாமதமாகின்றன. 25 சதவீத கட்டணம் மூலம் தற்காலிக சான்றிதழ்களைப் பெறுவது இத்தகைய திட்டங்களுக்கு நிவாரணம் அளிக்கும். மீதமுள்ள தொகையை பின்னா் கட்டணச் செயல்முறையின்போது செலுத்தலாம். அதிகப்படியான கட்டணம் வீடுகள் கட்டுமானத்தில் தடையாக உள்ளதாக பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. இது குடிமக்களுக்கும் அமைப்புக்கும் உகந்ததாக இல்லை. எனவே இதை மாற்ற தில்லி ஜல் போா்டு திட்டமிட்டு இந்த சீா்திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என தெரிவித்தாா்.