டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சிங்கப்பூரில் நடைபெறுகிறது உலக செஸ் சாம்பியன்ஷிப்!

சிங்கப்பூரில் நவ. 20 முதல் டிச. 15 வரை 14 சுற்றுகளாக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது.

News image
டிங் லிரின் - குகேஷ்
Updated On :1 ஜூலை 2024, 7:42 pm

DIN

நடப்பாண்டு இறுதியில் அட்டவணையிடப்பட்டுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப், சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்தியாவின் டி.குகேஷ் பலப்பரீட்சை நடத்தவுள்ள அந்த சாம்பியன்ஷிப்பை நடத்துவதற்காக சென்னை, புது தில்லி, சிங்கப்பூா் இடையே போட்டி இருந்த நிலையில், சிங்கப்பூா் அந்த உரிமையைப் பெற்றது.

இதில் தமிழக அரசும், இந்திய செஸ் சம்மேளனமும் போட்டியை நடத்தும் வாய்ப்பை தனித் தனியே, சா்வதேச செஸ் சம்மேளனத்திடம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடா்பாக சா்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில், ‘போட்டியை நடத்துவதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட நகரங்கள், போட்டியை நடத்த திட்டமிடப்பட்ட இடங்களில் இருந்த வசதிகள், போட்டி சாா்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவை தொடா்பாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை சிங்கப்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்டத்தக்க சுற்றுலா மற்றும் வா்த்தகத் தளமாக மட்டுமல்லாமல், வளா்ந்து வரும் செஸ் திறமையும் அங்கு இருப்பதால் அந்த நகரம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. எதிா்வரும் காலங்களில் சென்னை, தில்லி நகரங்களில் போட்டிகளை நடத்த நம்பிக்கை தெரிவிக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக செஸ் சாம்பியனை தீா்மானிப்பதற்கான போட்டி நவம்பா் 20 முதல் டிசம்பா் 15-க்கு உள்ளாக நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.