அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஆலோசகராகும் டிராவிட்?

தற்போதைய ஆலோசகர் கெளதம் கம்பீர், இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்.

News image

ராகுல் டிராவிட்

Updated On :9 ஜூலை 2024, 2:21 pm IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் பணிக்கு ராகுல் டிராவிட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக பெரும் ஏமாற்றம் அளித்த கொல்கத்தா அணியின் ஆலோசகராக இந்தாண்டு கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்ட நிலையில், அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் பதவிக்கு சிறந்த வீரரை தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

முதல்கட்டமாக டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வுபெற்ற இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை ஆலோசகர் பணிக்கு நியமிக்க அவருடன் பேச்சுவார்த்தையை கொல்கத்தா அணி நிர்வாகம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்த காலகட்டத்தில் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது மட்டுமின்றி, ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களிலும் இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாமிடம் பிடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.