பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

இந்தியர்களின் வெறுப்புக்கு காரணம் கண்டுபிடித்துவிட்டேன்! ரசிகர்களை வம்பிழுத்த நியூசி. வீரர்!

நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் இந்திய ரசிகர்களை வம்பிழுத்த இன்ஸ்டா ஸ்டோரி வைரல்.

தோனியை ரன் அவுட் செய்த மார்டின் கப்டில். - படம்: மார்டின் கப்டில் / இன்ஸ்டா

Published On :

நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் இந்திய ரசிகர்களை வம்பிழுத்த இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகியுள்ளது.

இந்திய அணி 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்தது. இந்த உலகக் கோப்பையுடன் எம்.எஸ்.தோனி ரன் அவுட் ஆகினார். அவரை ரன் அவுட் ஆக்கியது மார்டின் கப்டில்.

இந்தப் போட்டியுடன் தோனி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் தோனி மற்றும் இந்திய ரசிகர்கள் ஒவ்வொரு வருடமும் ஜூலை 10 அன்று நியூசி. வீரர் மார்டின் கப்டிலை சமூக வலைதளத்தில் திட்டுவார்கள்.

இதனை கிண்டல் செய்யும் விதமாக மார்டின் கப்டில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “என்னை இவ்வளவு வெறுப்பதற்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டேன்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனி மட்டும் அப்போது ரன் அவுட் ஆலவில்லை என்றால் நாம் இன்னொரு உலகக் கோப்பையை வென்றிருக்கலாம் என இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.