இந்திய அணியில் ஆல்ரவுண்டராக இடம்பிடிக்க ஒவ்வொரு நாளும் தனது 100 சதவிகித உழைப்பை கொடுக்க வேண்டிருக்கும் என இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அண்மையில் டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகக் கோப்பையை வென்ற பிறகு, கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், இந்திய அணியில் ஆல்ரவுண்டராக இடம்பிடிக்க ஒவ்வொரு நாளும் தனது 100 சதவிகித உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும் என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எனக்கு நன்றாக வருபவற்றை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். போட்டிகளுக்காக என்னை சிறப்பாக தயார் செய்துகொள்ள வேண்டும். இந்திய அணியில் ஆல்ரவுண்டராக இடம்பிடிக்க ஒவ்வொரு நாளும் எனது 100 சதவிகித உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும். அதில் எந்த ஒரு சமரசமும் செய்துகொள்ளக் கூடாது. இந்திய அணிக்காக விளையாடுவது எனக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. அதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. நேற்றையப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அவர் 15 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











