தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது: ஆவேஷ் கான்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.

News image
- படம் | பிசிசிஐ
Updated On :11 ஜூலை 2024, 11:50 am

DIN

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே அணி தொடக்கத்திலேயே 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆவேஷ் கான் பந்துவீச்சில் பிரையன் பென்னட் அடித்த ஷாட்டை ரவி பிஷ்னோய் அபாரமாக கேட்ச் செய்தது இந்திய வீரர்களை அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடையச் செய்தது.

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரவி பிஷ்னோய் பிரையன் பென்னட்டின் கேட்ச்சினை பிடித்தபோது, அவர் எப்படி அந்த கேட்ச்சினைப் பிடித்தார் என்பதே தெரியவில்லை. பந்தினை வீசிவிட்டு என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் எல்லாம் நடந்துவிட்டது. அவர் எப்படி அந்த கேட்ச்சினைப் பிடித்தார் என்பது எனக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவர் மிகச் சிறந்த ஃபீல்டர். எனது பந்துவீச்சில் விக்கெட் கிடைத்திருந்தாலும், அந்த விக்கெட் கிடைத்தற்கு ரவி பிஷ்னோயின் சிறப்பான ஃபீல்டிங்கே காரணம் என்றார்.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நாளை மறுநாள் (ஜூலை 13) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.